சென்னை: வங்கக் கடலில் ஆக. 9-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். புதிதாக உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. ஆக. 11, 12-ல் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒடிசா அருகே கரையை கடக்கக்கூடும் எனவும் கூறியுள்ளது.