×

சென்னை அருகே வீட்டு வாடகை பிரச்னை தொடர்பாக விசாரணை: தீக்குளித்த நபர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்..!!

சென்னை: சென்னை அருகே வீட்டு வாடகை பிரச்னை தொடர்பாக விசாரணை நடத்தியதால், உடலில் தீவைத்து கொண்ட சீனிவாசன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் புழல் அருகே விநாயகபுரம் பகுதியில் வசிப்பவர் ராஜேந்திரன். இவரது வீட்டில் சீனிவாசன் என்பவர், குடும்பத்தினருடன் வாடகைக்கு வசித்து வந்தார். ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

இதனையடுத்து, கடந்த 29ம் தேதி ராஜேந்திரன் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் நேற்று சம்பவ இடத்திற்கு வந்த புழல் காவல் ஆய்வாளர் பென் சாம், சீனிவாசனிடம் விசாரணை நடத்தி அவரை காவல் நிலையம் வர வேண்டும் என வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. இதனால், வேதனையடைந்த அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார்.

இதில் பலத்த காயமடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், இந்த விவகாரத்தில், இன்ஸ்பெக்டர் பென்சாமை, சஸ்பெண்ட் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

Tags : death ,Police inspector ,Chennai ,firefighter , Chennai, housing rent, problem, police inspector, dismissal
× RELATED புகையிலை பொருட்கள் கடத்தல்