×

பனைக்குளத்தை சேர்ந்த ராஜாசிங் என்பவர் தாக்கப்பட்ட வழக்கு!: சாத்தான்குளம் போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளத்தில் காவல் நிலையத்தில் தந்தை - மகன் அடித்து கொல்லப்பட்டதை போன்றே தன்னையும் கொல்ல முயன்றதாக ராஜாசிங் என்பவர் அளித்த புகாரில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கை தொடர்ந்து சாத்தான்குளம் போலீசார் மீது பல்வேறு குற்றசாட்டுகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. பேய்க்குளத்தை சேர்ந்த மகேந்திரன் என்ற நபரும் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதாக புகார் உள்ளது.

இந்த நிலையில் மேற்கு பனைக்குளத்தை சேர்ந்த ராஜாசிங் என்பவர் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் நீதிபதியிடம் சாத்தான்குளம் போலீசாருக்கு எதிராக வாக்குமூலம் அளித்திருந்தார். ஒரு கொலை வழக்கில் தன்னை கைது செய்து போலீசார் மிக கடுமையாக தாக்கியதாக ராஜாசிங் கூறியிருந்தார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பேரில் தாக்குதல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை தொடங்கினர். மேலும், போலீசாரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் ராஜாசிங்கிடம் ஆய்வாளர் சபிதா தலைமையிலான சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

Tags : Rajasinghe ,CBCID ,Panaikulam ,Sathankulam ,police investigation ,Rajasingh , Rajasingh, Panaikulam , CBCID police investigate ,Sathankulam police ,
× RELATED நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி...