×

சென்னையில் உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு சீல்; காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சென்னை: சென்னை கோயம்பேடு, அண்ணா நகர் பகுதிகளில் உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு சீல் வைக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்கு உட்பட்ட கோயம்பேடு, அண்ணா நகர், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் உரிமம் இன்றி சட்டவிரோதமாக ஸ்பாக்கள் இயங்கி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. ஸ்பா என்ற பெயரில் மசாஜ் மற்றும் பாலியல் தொழில்கள் நடைபெறுவதாகவும் தகவல் கிடைத்த வண்ணம் உள்ளன. அதன் அடிப்படையில் சென்னை காவல்துறையின் தனிப்படை போலீசார் கோயம்பேடு, அண்ணா நகர் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சென்னை பெருநகர காவல்துறை மற்றும் மாநகராட்சியின் ஆவணங்களை பெறாமல் அனுமதியின்றி சட்டவிரோதமாக ஸ்பாக்கள் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த ஒரு மாதத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பாக்களை மூடி சென்னை காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் மூடப்பட்ட 55 ஸ்பாக்களின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு சீல்; காவல்துறை அதிரடி நடவடிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : spas ,Chennai ,Koyambedu ,Anna Nagar ,Thirumangalam ,Chennai Metropolitan Police ,
× RELATED சென்னையில் உரிமம் இன்றி இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு காவல்துறையினர் சீல்