×

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

சென்னை : நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2019 ஆண்டு ஜூலை மாதம் தமிழக அரசின் அதிகாரம் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Seeman ,cancellation ,Chennai High Court ,Naam Tamil , Chennai High Court orders cancellation of defamation case against Tamil Party chief coordinator Seeman
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...