ஹதராபாத்: இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் இருந்ததாகவும் அதனால் அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பரிசோதனை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். பரிசோதனைக்கு பின் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், மருத்துவர்களின் பரிந்துரைத்தபடி வீட்டிலேயே தனிமைப்படுத்தியுள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.