நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் போலீஸ் தாக்கியதில் சண்முகம் என்பவர் இறந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீஸ் தாக்கியதில் காயம் அடைந்த சண்முகம் 2 நாட்களுக்கு பின் மருத்துவமனையில் உயிரிழந்தார். போலீசை கண்டித்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சண்முகம் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.