×

நீர் வீழ்ச்சியில் குளித்தபோது செங்குளவி கடித்து 2 பேர் பலி

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள நடுஹட்டி ஊராட்சிக்குட்பட்ட ஆடத்தொரை பகுதிக்கு கோவை சித்தாபுதூர் பகுதியில் இருந்து 9 பேர் கொண்ட 3 குடும்பத்தினர் சுற்றுலா வந்தனர். பின்னர், அப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றனர். அப்போது செங்குளவி அவர்களை கடித்தது.

இதனால் படுகாயமடைந்த அனைவரும் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர். இதில், கார்த்திகேயன் (56), ராஜசேகரன் (56) ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் உள்ள ரவி, கண்ணன் ஆகியோர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

The post நீர் வீழ்ச்சியில் குளித்தபோது செங்குளவி கடித்து 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,Chittabudur ,Coimbatore ,Adathorai ,Naduhatty panchayat ,Nilgiri district ,
× RELATED புவி வெப்பமயமாதலை தடுக்க காற்றில்...