×

நாட்டுக்காக அப்துல் கலாம் அவர்கள் கண்ட கனவுகளை நனவாக்கிட அனைவரும் பாடுபடுவோம் : டிடிவி தினகரன்

சென்னை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாளையொட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அவருக்கு நினைவஞ்சலி செலுத்தியுள்ளார். ஆண்டுதோறும் அப்துல் கலாம் நினைவுதினமான ஜூலை 27-ம் தேதி ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பு என்ற இடத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்களும், மாணவர்களும், இளைஞர்களும் நினைவஞ்சலி செலுத்துவர். இந்தாண்டு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பெரியளவில் அப்துல் கலாம் நினைவிடத்திற்கு யாரும் செல்லவில்லை. ஆகவே அப்துல் கலாமை நினைவு கூறும் விதமாக அவரது பொன்மொழிகளையும், திருவுருவப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், இளைஞர்களின் இதய நாயகராக, இந்திய மக்களின் மனம் கவர்ந்த குடியரசுத்தலைவராக, எழுச்சி சிந்தனைகளை நம் மனதி விதைத்தவராக திகழ்ந்த டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். நாட்டுக்காக கலாம் அவர்கள் கண்ட கனவுகளை நனவாக்கிட அனைவரும் பாடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags : Abdul Kalam ,country ,DTV Dinakaran , Abdul Kalam, Dreams, DTV Dhinakaran
× RELATED ராமநாதபுரத்தில் விமான நிலையம் நவாஸ்கனி எம்பி தேர்தல் அறிக்கை வெளியீடு