×

சமூக வலைத்தளங்களில் நடிகை வனிதாவின் திருமணம் குறித்து விமர்சித்த சூர்யா தேவிக்கு கொரோனா உறுதி!: குடும்பத்துடன் மாயம்..!!

சென்னை: நடிகை வனிதா குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்ட சூர்யா தேவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், குடும்பத்துடன் தலைமறைவான அவரை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகிறார்கள். நடிகை வனிதா விஜயகுமார் 3வது திருமணம் செய்து கொண்டதை சமூக வலைத்தளங்களில் விமர்சித்ததாக சூர்யா தேவி என்பவரை வடபழனி மகளிர் காவல்நிலைய போலீசார் அண்மையில் கைது செய்தனர். தொடர்ந்து, நீதி மன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு முன்பாக சூர்யா தேவி மற்றும் அவரை கைது செய்த ஆய்வாளர் ரேணுகா தேவிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் சூர்யா தேவி ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில், கொரோனா பரிசோதனை முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதில் சூர்யா தேவி மற்றும் அவரை விசாரித்த ஆய்வாளர் ரேணுகாவுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. ஜாமினில் வெளிவந்த சூர்யா தேவிக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்க தொடர்பு கொண்ட போது, சூர்யா தேவி தனது செல்போனை அணைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். அவரை தேடும் பணியில் சுகாதாரத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே வனிதாவிடம் விசாரணை மேற்கொண்ட போரூர் உதவி ஆணையருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Vanitha ,Surya Devi ,Corona ,Magic , Actress Vanitha, Surya Devi, Corona
× RELATED காதல் உறவுகளை சொல்லும் உப்பு புளி காரம்