சென்னை: தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் பயிர்க்கடன் வழங்கக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மத்திய கூட்டுறவு வங்கிகள் மட்டுமே பயிர்க்கடன் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் பயிர்க்கடன் வழங்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் நகை அடமானத்தின் பெயரிலான கடன்களையும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.