×

சர்வதேச அரங்கில் இந்தியா தமது வலிமையையும் மரியாதையும் இழந்து வருகிறது : ராகுல் காந்தி தாக்கு!!

டெல்லி: சர்வதேச அரங்கில் இந்தியா தமது வலிமையையும் மரியாதையும் இழந்து வருகிறது என்று மத்திய பாஜக அரசை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாடியுள்ளார். சமீபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஆங்கில நாளேடு ஒன்று வெளியிட்ட செய்தியில்,ஈரானில் இருக்கும் சாபஹார் துறை முகத்தில் இருந்து ஆப்கானிஸ்தானின் எல்லையில் இருக்கும் ஷாஹேடன் பகுதிக்கு இந்தியா சார்பாக ரயில்வே பாதை அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ரயில் பாதை அமைக்கும் ஒப்பந்தத்தை இந்தியா உடன் ஈரான் 4 ஆண்டுகளுக்கு முன்பாக மேற்கொண்டது. ஆனால் இந்திய தரப்பிலிருந்து நிதி அளிப்பதில் தாமதமாகி வருவதால், இந்தத் திட்டத்தை ஈரானே நிறைவேற்றிக் கொள்ள உள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த செய்தி சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்துக்குரியதானது.  தற்போது இலங்கையின் கொழும்பு துறைமுக திட்டத்தில் இருந்தும் இந்தியா விலக்கப்படும் நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவின் சர்வதேச வியூகம் தோல்வி அடைந்துவிட்டது. சர்வதேச அரங்கில் இந்தியா தமது வலிமையையும் மரியாதையையும் அனைத்து இடங்களிலும் இழந்து நிற்கிறது; இதனை சரி செய்ய மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை என கூறியுள்ளார்.

Tags : India ,attack ,arena ,Rahul Gandhi , International Forum, India, Strength, Respect, Rahul Gandhi, Attack
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!