×

ஆட்சியை சசிகலாவிடம் ஒப்படைப்பதை மேலிடம்தான் முடிவு செய்யும்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி

சென்னை: நாகை அருகே செருதூர் உயர்நிலைப் பள்ளியில் ரூ.1 கோடியே 61 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று துவக்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி:  தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தர மறுக்கிறது. பருவமழையும் காலதாமதமாக தொடங்கியுள்ளது. எனவே விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூலை காண வேண்டும்.  சசிகலா சிறையில் இருந்து வந்தவுடன் கட்சி, ஆட்சி ஆகிய இரண்டையும் அவரிடம் ஒப்படைப்பது குறித்து தலைமை தான் முடிவு செய்யும். நான் ஒரு மாவட்ட செயலாளர்தான். எனவே இது குறித்து தலைமையிடம் பத்திரிகையாளர்கள் கேட்டு தெரிந்து கொள்ளவும் என்றார்.

சசிகலா குடும்பம் தேவையில்லை
சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று பேட்டியளிக்கையில், ‘‘சசிகலா விவகாரத்தில், கட்சியின் கருத்து ஒன்றுதான். நேற்று, இன்று, நாளையும் அதே முடிவுதான். சசிகலா மற்றும் அவர் குடும்பம் இல்லாமல், கட்சியையும், ஆட்சியையும் நடத்துவதுதான் அந்த முடிவு. இதுதான் ஒருமித்து எடுக்கப்பட்ட முடிவு’’ என்று கூறினார்.

Tags : OS Maniyan ,Sasikala ,interview , Sasikala, Minister O. S. Maniyan
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்