×

கொரோனா பரிசோதனைக்கு பயந்து வாலிபர் தற்கொலை: மதுரவாயலில் பரிதாபம்

அண்ணாநகர்: கொரோனா பரிசோதனைக்கு பயந்து வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மதுரவாயல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் நிக்கில் டேவிஸ் (32). சென்னை மதுரவாயல் வரலட்சுமி நகர் மெயின் ரோடு பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, அண்ணாநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களாக இவர் தனது அறையைவிட்டு வெளியே வரவில்லை. கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று இவரது அறையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தினர் இதுபற்றி கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, கதவை உடைத்து உள்ளே சென்றபோது, டேவிஸ் அழுகிய நிலையில் தூக்கில் சடலமாக தொங்குவது தெரிந்தது.

சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், டேவிஸ்க்கு கடந்த சில தினங்களாக கடுமையான காய்ச்சல் இருந்ததால், அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது டாக்டர்கள், கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி டேவிஸ்க்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அங்கிருந்து வீட்டிற்கு வந்த டேவிஸ், கொரோனா பரிசோதனைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Tags : corona test , Corona Examination, Fear, Plaintiff, Suicide
× RELATED கட்டுப்பாடுகளால் நெருக்கடி எதிரொலி...