மீனம்பாக்கம்: ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, சிறப்பு விமானங்களில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அபுதாபியிலிருந்து ஏர்இந்தியா சிறப்பு மீட்பு விமானம் நேற்று காலை 7.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் 135 ஆண்கள், 37 பெண்கள், 7 சிறுவர்கள் என மொத்தம் 179 இந்தியர்கள் வந்தனர். அவர்கள் அனைவருக்கும் விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைகள், குடியுரிமை, சுங்க சோதனைகள் நடந்தன. அதன்பின்பு அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டது.