×

சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..: விழுப்புரத்தை சேர்ந்த வாலிபரிடம் விசாரணை!

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜயின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம், அவரது ரசிகர்களை மட்டுமல்லாது, பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நடிகர் விஜய் தற்போது பனையூரில் உள்ள பங்களாவில் வசித்து வந்தாலும் அவருக்கு சாலிகிராமத்தில் இன்னொரு வீடு உள்ளது. சாலிகிராமத்தில் உள்ள அந்த வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த போலீஸார், சாலிகிராமம் மற்றும் விருகம்பாக்கத்தில் உள்ள விஜய்க்கு சொந்தமான வீடுகளில் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.  

சோதனையின்போது வெடிகுண்டு எதுவும் சிக்காததால், இது வெறும் புரளி என தெரியவந்தது. இதனையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார், விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் முடிவில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஷ்வர் என்றும், அவர் மனநிலை சரியில்லாதவர் என்பதையும் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவரது குடும்பத்தினரிடம் எச்சரிக்கை விடுத்த போலீசார், இனிமேல் இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.



Tags : Bomb attack ,house ,Vijay ,attack ,Investigation ,Chennai Saligramam Bombay ,Villupuram ,Chennai Saligramam , Saligramam, actor Vijay, house, bomb threat
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்