பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. ஊரடங்கால் இந்த கடை பூட்டியே கிடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த டாஸ்மாக் கடை பூட்டு உடைக்கப்பட்டு, ஒரு மர்ம கும்பல் மதுபானங்களை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்த மோகன் (22), அரவிந்தன் (22), வினோத் (22) ஆகிய 3 பேரை பூந்தமல்லி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.