×

சுகாதார அமைச்சரின் ‘தட்டுப்பாடு இல்லை’ அறிக்கை மக்களை முட்டாள்களாக கருதும் அரசுக்கு எதிராக போராடுவோம்: ப.சிதம்பரம் கடும் விமர்சனம்

சென்னை: மத்திய சுகாதார துறை அமைச்சரின் அறிக்கையை பார்த்து, மக்களை முட்டாள்களாக கருதும் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும் என்று ப.சிதம்பரம் கடும் விமர்சனம் செய்துள்ளார். அதிக மக்கள் தொகை கொண்ட  உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா 2வது அலையில் அதிக தொற்று  பாதிப்புகளையும், அதிக உயிரிழப்புகளையும் சந்தித்து வருகிறது. மாநிலத்தில்  ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஆக்ஸிஜன்  பற்றாக்குறை இல்லை, தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்றும் மாநில அரசு சிறப்பாக செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள்  வைத்து உள்ளதாக முதல்வர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்தார்.  உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கருத்து அருவருப்பாக உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் கூறியிருந்தார். இதேபோன்று, ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை இல்லை என்ற மத்திய சுகாதார அமைச்சரின் அறிக்கையால் தாம் திகைத்து விட்டதாக, ப.சிதம்பரம் தமது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார். நேற்றைய தனது டிவிட்டர் பதிவில் ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது: அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் போலி காட்சிகளை ஒளிபரப்புகின்றனவா, செய்தித்தாளில் கூறப்பட்டது அனைத்தும் தவறானதா, மருத்துவர்கள் அனைவரும் பொய் சொல்கிறார்களா, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தவறான அறிக்கைகளை வெளியிடுகிறார்களா, காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் போலியானதா. இந்திய மக்கள் அனைவரும் முட்டாள் என்று கருதும் ஒரு அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும். நோயாளிகளின் குடும்பத்தினர் பொய் சொல்கின்றனரா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post சுகாதார அமைச்சரின் ‘தட்டுப்பாடு இல்லை’ அறிக்கை மக்களை முட்டாள்களாக கருதும் அரசுக்கு எதிராக போராடுவோம்: ப.சிதம்பரம் கடும் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Health ,P Chidambaram ,Chennai ,Union ,Health Minister ,P.Chidambaram ,
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...