×

கொரோனா அச்சம் பாத்திரக்கடை ஊழியர் தற்கொலை

ஆவடி: ஆவடி அடுத்த திருநின்றவூர், நாச்சியார் சத்திரம் கிராமத்தைச் சார்ந்தவர் சக்திகுமார் (35). இவர் திருநின்றவூர், சி.டி.எச் சாலையில் உள்ள பாத்திரக் கடையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஈஸ்வரி (30) இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக பாத்திர கடை மூடப்பட்டு இருப்பதால் சசிகுமார் வேலைக்கு செல்லவில்லை. மேலும், தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து சக்திகுமார் தனக்கு தொற்று வந்து விடுமோ என அச்சத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை ஈஸ்வரி கூலி வேலைக்கு சென்று விட்டார். மேலும், அவர் குழந்தைகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பிவிட்டார். இதற்கிடையில், நேற்று மதியம் ஈஸ்வரி, சக்திகுமாருக்கு பலமுறை போன் செய்துள்ளார். ஆனால், அவர் போனை எடுத்து பேசாததால்ஈஸ்வரி வீட்டுக்கு வந்தார்.  அப்போது சக்திகுமார் வீட்டில் தூக்கில் தொங்கினார். இதை பார்த்து ஈஸ்வரி கதறி அழுதார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Corona ,suicide ,bartender , Corona fears, bartender employee, suicidal
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...