சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சென்னை பட்டினப்பாக்கம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு உதவி ஆய்வாளர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.