சென்னை : சென்னை மாநகரில் பல்வேறு குழுக்கள் அமைத்து கொரோனா தடுப்புப் பணி மேற்கொள்ளப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை மாநகரில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 58% ஆக உயர்ந்துள்ளது என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 56,000 பேரில் 36,000 பேர் குணமடைந்து உள்ளதாகவும் ஆணையர் பிரகாஷ் கூறினார்.கொரோனா தொடர்பான விவரங்களை அறிய மண்டல வாரியாக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் சென்னையின் 15 மண்டலங்களிலும் தொடர்பு கொள்ள 15 தொலைபேசி எண்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார்.