சென்னை: வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் கிஷோர் (51). இவர், பெரியபாளையம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு நிலோபர் (43) என்ற மனைவியும், ரசிகா (23), சகினா (18) என்ற மகள்களும் உள்ளனர். நேற்று மாலை பணிமுடிந்து வீடு திரும்பிய கிஷோர், படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து பணிச்சுமை காரணமாக கிஷோர் தற்கொலை செய்து கொண்டாரா என விசாரித்து வருகின்றனர்.