மதுரை: மதுரையில் தனிமைப்படுத்துதல் முகாமில் தற்கொலைக்கு முயற்சித்த கொரோனா நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனிமைப்படுத்துதல் முகாமில் உரிய சிகிச்சை, உணவு தரவில்லை என கூறி முதியவர் மாடியில் இருந்து குதித்துள்ளார். மாடியில் இருந்து குதித்ததில் படுகாயமடைந்த முதியவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.