×

தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்: சாத்தான்குளத்தில் 2 புதிய எஸ்.ஐ-கள் நியமனம்!!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 2 புதிய காவல் உதவி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உறவினர்களின் தொடர் போராட்டத்தினால் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் 2 எஸ்.ஐ-கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும், ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, கடந்த 19-ந்தேதி இரவில் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்களை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட மகனும், தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளன. மேலும், இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, தந்தை, மகன் உயிரிழந்த நிலையில் 2 எஸ்ஐ-கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் புதிதாக 2 காவல் உதவி ஆய்வாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Father, Son, Satan, SI
× RELATED தாளவாடி மலைப்பகுதியில் வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது