டெல்லி: தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் காவல்துறையினரின் செயல்பாட்டிற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது; போலீஸ் மிருகத்தனமாக நடந்து கொள்வது ஒரு கொடூரமான குற்றம். நமது பாதுகாவலர்கள் ஒடுக்குமுறையாளர்களாக மாறுவது சோகமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.