×

இன்ஸ்பெக்டர்கள் உட்பட179 பேருக்கு கொரோனா

பெரம்பூர்: சென்னை ஓட்டேரி பட்டாளம் காவலர் குடியிருப்பில் வசிக்கும் மாதவரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மற்றும் சிசிபியில் பணிபுரியும் பெண் இன்ஸ்பெக்டர், ஓட்டேரி எஸ்பிஓ காலனி 2வது தெருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர், நார்த் டவுன் பகுதியில் 2 பேர், செல்லப்பா தெருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர், ஈடன் கார்டன் தெருவில் 4 பேர், செம்பியம் ராஜாஜி தெருவில் தம்பதி, திருவிக நகரில் 4 பேர், திருவிக நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர், பெரவள்ளூர் காவலர் குடியிருப்பை சேர்ந்த போக்குவரத்து போலீஸ்காரர், ஜிகேஎம் காலனியில் 4 பேர், எஸ்ஆர்பி காலனியில் 2 பேர், ஜவகர் நகரில் 2 பேர், கொளத்தூர் சேமநாதபுரம் பகுதியில் 10 பேர், புளியந்தோப்பு வெங்கடேசபுரம் நியூ காலனியில் 3 பேர் என திருவிக நகர் மண்டலத்தில் நேற்று 179 பேருக்கு கொரோனா தொற்று  உறுதியானது.

  பூந்தமல்லி: போரூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் 30 வயதுடைய எஸ்ஐ ஒருவருக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அவருக்கு இருமல், காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதே காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 28 வயதுடைய எஸ்ஐ ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இருவரின் அறைகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அறைகள் பூட்டப்பட்டது. மேலும், காவல் நிலைய வளாகம் முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டது. ஒரே போலீஸ் நிலையத்தில், அடுத்தடுத்து இரண்டு எஸ்ஐ கொரோனாவால் பாதிக்கப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   


Tags : Corona ,inspectors , Corona ,179 people, including, inspectors
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...