×

காவிரிப்பாசன மாவட்டங்களின் கடைமடைப்பகுதிக்கு நீர் செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: காவிரிப்பாசன மாவட்டங்களின் கடைமடைப்பகுதிக்கு நீர் செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். காவிரி கடைமடைக்கு குருவை சாகுபடிக்கு நீர் செல்லும் வகையில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தூர்வாரும் பணியை மேற்பார்வையிட கமிட்டிகளை அமைத்த அமைத்த அதிமுக அரசு பணிகளை விரைவுப்படுத்தவில்லை. ஜூன் 12-ம் தேதியே மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் இன்னும் கடைமடைக்குச் சென்று சேரவில்லை. மேட்டூரில் இருந்து வினாடிக்கு 10,000 கன அடி நீருக்குப்பதில் 15,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் எனவும் கூறினார்.


Tags : government ,Tamil Nadu ,MK Stalin ,districts ,shop floor ,Kaviripasana , Kaviripasana District, Shalamada Area, Water, Tamil Nadu Government, MK Stalin
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...