×

சென்னை, மதுரையை தொடர்ந்து `பிளாஸ்மா சிகிச்சை’ அளிக்க நெல்லை அரசு மருத்துவமனை தயார்!...கொரோனாவை வென்றவர்கள் ரத்தமாதிரி வழங்க முன்வர வேண்டுகோள்

நெல்லை: கொரோனா உயிரிழப்பை தடுப்பதற்காக நெல்லை அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கு தயார் நிலையில் மருத்துவ குழுவினர் உள்ளனர். எனவே கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று கொரேனாவை வென்றவர்கள் இதற்கான மாதிரி ரத்தம் வழங்க முன்வர வேண்டும் என மருத்துவ துறையினர் வேண்டுகோள் விடுத்துள் ளனர். இந்தியாவில் ெகாரோனா பாதிப்பும் உயிரிழப்பும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இதனை தவிர்ப்பதற்காக  தொற்று பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களுக்கு  இந்திய மருத்துவத்தின் கபசுர குடிநீர், ஹோமியோபதி  மாத்திரை  முறைகளும் கையாளப்படுகின்றன.   இதன் காரணமாக நோய் பாதிப்பு எண்ணிக்கையில் இருந்து மீண்டு வருவோர் எண்ணிக்கை 56 சதவீதத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் 50 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் விரைவாக குணமாகி வீடு திரும்புகின்றனர் அதே நேரத்தில் உயிரிழப்பு களும் ஏற்படுகின்றன. உயிரிழப்புகளை தடுப்பதற்காக பல்வேறு சிகிச்சை முறைகளும் கையாளப்படுகின்றன. இதில் முக்கிய சிகிச்சை முறையான பிளாஸ்மா சிகிச்சை முறை பரிந்துரைக்கப்பட்டு அதன் மூலம் உயிரிழப்பு என்ற உச்சநிலைக்கு சென்ற பலர் மீட்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் தற்போது சென்னை, மதுரை அரசு மருத்துவமனைகள் உள்பட நாடு முழுவதும் 44 மையங்களில் பிளாஸ்மா சிகிச்சை கடந்த 14ம்தேதி தொடங்கியது. இதுவரை 155 பேர் பிளாஸ்மா சிகிச்சையால் குணமடைந்துள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதற்கட்டமாக கொரோனா நோயாளிகள் 13 பேருக்கு பிளாஸ்மா முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 6 பேருக்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட முடிவில் தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 பேர் குணமாகி வருகின்றனர். பிளாஸ்மா சிகிச்சை என்பது ஏற்கனவே  கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டு  முழுவதும் குணமாகி வீடு திரும்பியவர்களின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு அதில்  சில எதிர்ப்பு சக்தி அணுக்களை பிரித்து கொரோனா அதிகம் பாதித்து உயிருக்கு  ேபாராடுபவர்களுக்கு உடலில் செலுத்தி அவர்களை நோயில் இருந்து மீட்பது ஆகும். சென்னை, மதுரையை தொடர்ந்து தற்போது நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையிலும் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க மத்திய சுகாதாரத் துறை அனுமதி வழங்கியுள்ளது.

நெல்லை  அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கு பயிற்சி பெற்ற டாக்டர்கள், தொழில் நுட்பனர்கள் மற்றும் அதற்குரிய மருத்துவ ஆய்வுகூட உபகரண வசதிகள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன. இங்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினர் தயாராக இருந்தாலும் தொற்று அறிகுறிகளுடன் கொரோனா ஏற்பட்டு குணம் அடைந்து திரும்பியவர்கள் பிளாஸ்மா சிகிச்சைக்காக தங்களது ரத்த மாதிரிகளை வழங்க தயங்குவதாக கூறப்படுகிறது. நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் மட்டும் கடந்த 3 மாதங்களில் 400க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று கொரோனாவை வென்று நலமுடன் வாழ்கின்றனர். இவர்களில் பலரை தற்போது அரசு மருத்துவகல்லூரி மருத்துவ குழுவினர் தொடர்பு கொண்டு உயிருக்கு போராடும்  பிற கொரோனா நோயாளிகளை மீட்பதற்கு பிளாஸ்மா சிகிச்சைக்கான ரத்த மாதிரி தருவதற்கு வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனாலும் இதுவரை ஒருவர்கூட வரவில்லை என கூறப்படுகிறது.



Tags : Paddy Government Hospital ,Madurai ,Rice Government Hospital , Chennai, Madurai, Plasma Treatment, Rice Government Hospital, Corona
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை