×

கோழி குழம்பு சாப்பிட்ட 2 பேரன்கள் உயிரிழப்பு.: ஆந்திராவில் பாட்டி வீட்டில் நேர்ந்த பரிதாபம்

ஐதராபாத்: ஆந்திராவில் சிக்கன் மசாலா என்று நினைத்து பூச்சி மருந்தை கலந்து பாட்டி சமைத்த கொடுத்த சிக்கன் குழம்பை சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள  கிராமத்தில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. பேரப்பிள்ளைகள் வீட்டுக்கு வந்த மகிழ்ச்சியில் பாட்டி கோவிந்தம்மா ஆசையாகா சிக்கன் எடுத்து சமைத்துள்ளார்.

அவர் சமைக்கும் போது சிக்கன் மசாலா என்று நினைத்து பூச்சி மருந்தை குழம்பில் போட்டதாக தெரிகிறது. அந்த சிக்கன் குழம்பை உண்ட பாட்டி மற்றும் பேர குழந்தைகள் இருவரும் சிறுது நேரத்தில் அடுத்து அடுத்து மயங்கி விழுந்தனர். நீண்ட நேரமாகியும் கோவிந்தம்மா வீட்டில் இருந்து யாரும் வெளிய வராததால் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது தான் இந்த விபரீதம் நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.

பேர குழைந்தைகள் இருவரும் உயிரிழந்த நிலையில் பாட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : grandsons , 2 grandsons, die ,eating, chicken ,
× RELATED 4 தலைமுறையுடன் 100வது பிறந்தநாளை கொண்டாடிய பாட்டி