சென்னை: திமுக வடசென்னை முன்னாள் மாவட்ட செயலாளர் பலராமன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக தணிக்கைக்குழு உறுப்பினர் பலராமன் மறைந்த செய்தி கேட்டு மீளா துயரடைந்தேன். பலராமன் ஒரு கடின உழைப்பாளி, விறுவிறுப்புடன் களத்தில் பணியாற்றுவார். பலராமனை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் கழக தொண்டர்களுக்கு ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.