சென்னை: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கொரோனா நோயாளி கூவம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சென்னை நேப்பியர் பாலம் அருகே கூவம் ஆற்றில் மீட்கப்பட்ட உடல் தப்பியோடிய கொரோனா நோயாளி என தெரியவந்துள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 65 வயதான நபர் தப்பியோடினார்.