டெல்லி: பாகிஸ்தானில் காணாமல் போன 2 இந்திய தூதரக ஊழியர்கள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியானது. ஊழியர்கள் சென்ற வாகனம் ஒருவர் மீது மோதியதில் 2 போரையும் மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் 2 ஊழியர்கள், அவர்களது வாகனத்தை உடனே இந்திய தூதரகத்துடன் ஒப்படைக்க பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.