×

பேராசிரியர் அன்பழகன் மகள் மறைவு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை: மறைந்த திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் மகள் நேற்று உயிரிழந்தார். அவரது உடலுக்கு திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார் மறைந்த திமுக முன்னாள் பொது செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனுக்கு அன்பு செல்வன் என்ற மகனும், செந்தாமரை, மனவல்லி என்ற இரண்டு மகளும் உள்ளனர். 2 மகள்களும் டாக்டராக உள்ளனர். இதில் டாக்டர் மனவல்லி தனது கணவர் டாக்டர் சிவராமனுடன் மயிலாப்பூர் சாய்பாபா கோயில் அருகில் உள்ள இல்லத்தில் வசித்து வந்தார். சிவராமன் நரம்பியல் நிபுணர்.

இவர்களுக்கு டாக்டர் அனந்த கிருஷ்ணன், கலைச்செல்வி என்ற மகளும் உள்ளனர். இதில் கலைச்செல்வி. சென்னை பல்கலைக்கழகத்தில் துறை தலைவராக பணியாற்றி வருகிறார். மனவல்லி உடல் நலக்குறைவால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 68. இந்த தகவல் அறிந்ததும் திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மறைந்த மனவல்லி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதே போல திமுக நிர்வாகிகளும் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

Tags : Anbalakaran ,disappearance , Prof. Anbalakaran's ,daughter's, disappearance
× RELATED 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை...