சண்டிகர்: பஞ்சாப்பில் பள்ளிகள் மற்றும் கல்லூரி தேர்வுகள் நடத்துவது குறித்து ஜூன் 30ம் தேதி பிறகு முடிவெடுக்கப்படும் என முதல்வர் அமரீந்தர் சிங் தகவல் தெரிவித்துள்ளார். ஜூன் 30ம் தேதிக்கு பிறகு மத்திய அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி தேர்வு நடத்தப்படும். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப்படி முகக்கவசம் அணிந்தால் கொரோனா பரவுவதை 75% -80% குறைக்க முடியும் என தெரிவித்துள்ளது, மக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.