புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருவோரை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார். நாட்டின் கோவிட் 19 நிலைமை குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் இன்று குணமடைந்தோரின் விகிதம் 49.21 சதவிகிதமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.