சென்னை: தமிழகத்தில் பொதுமுடக்க விதிகளை மீறிய 4,57,641 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை 5,62,233 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.11,13,25,154 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முழு ஊரடங்கை மீறிய 6,04,769 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.