×

பிரிட்ஜ் கண்ணாடி உடைத்ததால் பெற்றோருக்கு பயந்து சிறுவன் தற்கொலை: நீலாங்கரை அருகே பரபரப்பு

துரைப்பாக்கம்: விளையாடும்போது தவறுதலாக பிரிட்ஜ் கண்ணாடி உடைந்ததால் பெற்றோர் கண்டிப்பார்கள் என்று பயந்து சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நீலாங்கரை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரைச் சேர்ந்தவர் பூபாலன் (40). இவரது மனைவி உஷா (35). இவர்களது மகன்கள் தஷ்வந்த் (12), பிரமோத் (9). இந்நிலையில், பெற்றோர்இருவரும் வழக்கம்போல் நேற்று காலை வேலைக்கு சென்றனர். சிறுவர்கள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது, பிரமோத் அறையில் விளையாடி கொண்டிருந்தான்.

இதற்கிடையில், தஷ்வந்த் தின்பண்டங்களை எடுப்பதற்காக சமையல் அறையில் இருந்த பிரிட்ஜை திறந்து பார்த்தான். அப்போது, தவறுதலாக பிரிட்ஜின் உள்ளே இருந்த கண்ணாடி உடைந்தது. இதனால் பயந்துபோன தஷ்வந்த்  செய்வதறியாது திகைத்து நின்றான். பின்னர் பெற்றோர்கள் திட்டுவார்கள் என்ற பயத்தில் வீட்டிலிருந்த நைலான் கயிற்றை எடுத்து அங்கு இருந்த மின் விசிறி கொக்கியில் மாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். வீட்டிற்கு வந்த பெற்றோர் இதனை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். இதுகுறித்து, தகவல் அறிந்த நீலாங்கரை ஆய்வாளர் சரவணன் சம்பவ இடத்திற்கு சென்று தஷ்வந்த் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்   


Tags : Parents ,suicide ,breaking ,nilankarai ,Nilangara ,Sensation , Bridge glass, boy suicide, Nilangara
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை