சென்னை: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு தள்ளிவைக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் ஜூன் 15 முதல் தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.