×

கொரோனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட ராயபுரம்.. மண்டல வாரியான விவரத்தை வெளியிட்டது சென்னை மாநகராட்சி

சென்னை : சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 7,491 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில்  624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை  9,989 ஆக அதிகரித்துள்ளது. இதில் 60 பேர் வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,889 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் 1,391 பேருக்கும், திரு.வி.க.நகரில் 1,133 பேருக்கும், அண்ணாநகரில் 829 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தண்டையார்பேட்டையில் 974 பேரும், தேனாம்பேட்டையில் 1054 பேரும், திருவொற்றியூரில் 274 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 679 பேருக்கும், பெருங்குடியில் 152 பேருக்கும், அடையாறில் 533 பேருக்கும், அம்பத்தூரில் 415 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 107 பேருக்கும், மாதவரத்தில் 213 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 160 பேருக்கும், மணலியில் 126 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.


Tags : Royapuram ,Corona ,Chennai Corporation , Corona, chennai
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...