சேலம்: கொரோனா தடுப்பு பணிக்கு தமிழகம் கேட்ட தொகையில் போதிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என தெரிவித்த அவர் கொரோனா தடுப்பு பணியில் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என தெரிவித்துள்ளார்.