×

மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் உள்பட 2 பேருக்கு கொரோனா

மாமல்லபுரம்: காஞ்சிபுரம் பஸ் நிலையம் பின்புறம், அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன் தலைவராக உள்ள மத்திய கூட்டுறவு வங்கி உள்ளது. இங்கு பணியாற்றும் சிறுகாவேரிப்பாக்கத்தை சேர்ந்த ஊழியரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் வங்கியில் லோன்மேளா நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதனால் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் இதனை மூடிமறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

l மாமல்லபுரம் பேரூராட்சி வெண்புருஷம் பகுதியை சேர்ந்த 28 வயது வாலிபர், பெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் வாலிபருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்தார். அவரது ரத்த மாதிரியை  மருத்துவ குழுவினர் ஆய்வுக்கு அனுப்பியதில், வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிந்தது. இதையடுத்து, அவரை செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று சேர்த்தனர்.


Tags : Corona ,co-operative bank employee , Central Co-operative Bank, Curfew, Employee, Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...