×

கல்பாக்கம் அணுமின் நிலைய குடியிருப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் இயங்கும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றும் 48 வயதுடைய ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அதிகாரிகள், அவரை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தொடர்ந்து, 39 வயதுடைய அவரது மனைவி, 15 வயது மகள், 9 வயது மகன் என குடும்பத்தில் உள்ள அனைவரையும் அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அதில், அவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. அவர்களையும், அதே தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதைதொடர்ந்து, அவர்கள்  வசிக்கும் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பு பகுதி தடுப்புகள் அமைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஏற்பட்ட அணுமின் நிலைய ஊழியர் கோயம்பேடு சென்று வருபவரின் தொடர்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாங்காடு பகுதியை சேர்ந்த 3 பேர், காஞ்சிபுரத்தை சேர்ந்த 2 பேர், நந்தம்பாக்கம், பாலுசெட்டிசத்திரம், மேல்படப்பை, மேல் ஒட்டிவாக்கம், வடக்கு மலைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் என மொத்தம் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.



Tags : Corona ,plant ,Kalpakkam , Kalpakkam, Nuclear Station, Corona
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...