சென்னை: கொரோனா பரவல் தடுப்பு பணியில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாதது என்று சென்னை திருவல்லிக்கேணியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்த பின்னர் பேட்டி அளித்துள்ளார். சென்னையில் 50 இடங்களில் வாகனங்களில் கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் யாருடைய வாழ்வாதாரமும் பாதிக்கப்படக் கூடாது என்று தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.