அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் கிழக்கு, குஜ்ஜி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (31). இவர், நேற்று முன்தினம் மாலை வெளியில் சென்று இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்திருப்பது தெரிந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 11 சவரன் நகை, 50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி குத்துவிளக்கு, குங்குமச்சிமிழ் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து டி.பி.சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.