சென்னை: டாஸ்மாக் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று 2-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு அவகாசம் கோரியுள்ளது. விரிவான பதில் மனுவை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு தாக்கல் செய்யவில்லை என தெரிவித்துள்ளது. தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் நாராயண் ஆஜராகி விளக்கம் அளித்தார்.