ஊரடங்கு நேரத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துவிட்டது என்கிறார் நடிகை ஆண்ட்ரியா. இது பற்றி அவர் கூறியதாவது:கொரோனா வைரஸ் தரும் பயத்தை விட ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்கின்ற உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகள் அதிகமாக இருக்கிறது. இந்த செய்திகள் நிஜமாகவே வருத்தத்தை அளிக்கிறது மேலும் இதுகுறித்த விளைவுகளை நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. உணர்வுபூர்வமான போராட்டத்தை எதிர்கொள்ள பெண்கள் தைரியத்தை கையாள வேண்டும். தங்களுக்கு குடும்ப வன்முறைகள் ஏற்பட்டால் அதை தயங்காமல் வெளியே சொல்ல வேண்டும். இவ்வாறு ஆண்ட்ரியா கூறியுள்ளார்.