சென்னை: நீதிமன்ற உத்தரவின் படி மதுபானக் கடைகள் அடைக்க அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறித்து அனைத்து மதுபானக் கடைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.