×

சென்னையில் இருந்து சாத்தூருக்கு சென்ற சிறுவனுக்கு கொரோனா..: சிறுவன் வசித்த கிராமத்தை தனிமைப்படுத்தி கண்காணிப்பு

சென்னை: சென்னையில் இருந்து சாத்தூருக்கு சென்ற 13 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த சிறுவன் வசித்த கிராமம் தனிமைப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை அம்பத்தூரில் வசித்த ராஜேந்திரன் குடும்பத்தினர் சாத்தூர் அருகே உள்ள சொந்த கிராமமான கலிங்கப்பட்டிக்கு சென்றனர்.  

ராஜேந்திரன் அவரது மனைவி மற்றும் 13 வயது மகனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் அந்த 13 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கலிங்கப்பட்டி கிராமத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள்  தனிமைப்படுத்தி கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கின்றனர்.

கொரோனா பாதித்த சிறுவனை ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கலிங்கப்பட்டி கிராமத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.


Tags : Corona ,Chennai ,village ,Coronation , Coronation , boy ,Chennai ,Chennai,
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...