×

தமிழகத்தில் இனிமேல் 5 பேருக்கு மேல் கூடினால் கடும் நடவடிக்கை: போலீஸ் டிஜிபி எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் இனிமேல் 5 பேருக்கு மேல் கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் டிஜிபி திரிபாதி எச்சரித்துள்ளார்.
தமிழக போலீஸ் டிஜிபி திரிபாதி வெளியிட்ட அறிவிப்பு:  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகும், பொதுமக்களில் பலர் அதன் சட்ட விதிமுறைகளை சரிவர கடைபிடிக்காமலும், சமூக இடைவெளி தவிர்த்தும், உத்தரவுகளை மீறியும் செயல்பட்டு வருகின்றனர். இத்தடை உத்தரவுப்படி 5 நபர்களுக்கு மேல் எந்த இடத்திலும், எக்காரணத்திற்காகவும் கூடுவது சட்டவிரோதமானது. இச்சட்டம் அனைத்து சமூக, சமய மற்றும் மதம் சார்ந்த விழாக்கள், வழிபாடுகள் மற்றும் கூட்டங்களுக்கும் முழுமையாக பொருந்தும். ஆகவே ெபாதுமக்கள் 144 தடை உத்தரவு நடைமுறைகளை எக்காரணம் கொண்டும் மீறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை மீண்டும் வலியுறுத்துகிறது.

இனி 144 தடை உத்தரவை மீறி, 5 நபர்களுக்கு மேல் எந்த இடத்திலும், எவ்வித காரணங்களுக்காகவும் பொதுமக்கள் கூடினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்படுகிறார்கள். ஆகவே, பொதுமக்கள் சட்டவிதிகளை மீறுவதை தவிர்த்து இக்கொடிய தொற்று நோயை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு தமிழக காவல்துறையினருடன் முழுமையாக ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu , Tamil Nadu, Corona, Curfew, Police DGP
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...