×

சென்னைக்கு சிறப்பு கப்பல் அந்தமான் அரசு அறிவிப்பு

போர்ட் பிளேயர்: அந்தமான் நிகோபர் தீவுகளில் சிக்கி தவிக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்கள், மாணவர்களை அழைத்து செல்ல, போர்ட் பிளேயரில் இருந்து சென்னைக்கு சிறப்பு கப்பல் இயக்கப்படும் என்று அந்தமான் நிகோபர் அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்தமான் நிகோபர் அரசின் கப்பல் போக்குவரத்துத் துறையின் துணை இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: போர்ட் பிளேயரில் இருந்து சென்னை செல்ல விரும்புவோர் இன்று மாலை 5 மணிக்குள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்கள் கப்பல் மூலம் இங்கிருந்து சென்னைக்கு ஒரேயொரு முறை ஒரு வழிப்பயணமாக மட்டுமே அழைத்து செல்லப்படுவார்கள். இவர்கள் தங்களது பெயர், வயது, பாலினம், வசிப்பிடம், சேருமிடம், செல்போன் எண் உள்ளிட்ட தகவல்களை 9150572319 என்ற மொபைல் எண்ணுக்கோ அல்லது 9932080480 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவோ அனுப்ப வேண்டும்.

அதே போல, சென்னையில் இருந்து போர்ட் பிளேயர் வர விரும்புவோர் சென்னையில் உள்ள கப்பல் போக்குவரத்து உதவி இயக்குனருக்கு இந்த விவரங்களுடன் 9434272187 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டு கொள்ளப்படுகின்றனர். முதல் கட்டமாக, பரிசோதனைக்கு பின்னர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இல்லாதவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதன் பின்னர், போர்ட் பிளேயர் வருபவர்கள் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும், கப்பல் ஏறுவதற்கு முன் தனிமைப்படுத்தலில் இருந்ததற்கானதை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். வெளிமாநிலத் தொழிலாளர்கள், விவரங்களின் அடிப்படையில் மீண்டும் கப்பல் இயக்கப்படுமா என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

Tags : Government ,Andaman , Government , special shipment,Andaman
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...